நாட்டில் உளுந்து இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, சந்தையில் உளுந்தின் விலை 2 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.
உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கில் கடந்த வருடம் பல பொருட்களுக்கு அரசால் இறக்குமதித் தடை விதிக்கப்பட்டது.
இதனடிப்படையில், உளுந்து இறக்குமதிக்கும் ஜீன் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது.
இதனால் உளுந்துக்கு நாட்டில் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment