Wednesday, January 27, 2021

பலவந்தமாக எரிக்கப்பட்டவர்களின் விபரங்கள் கோரப்படுகிறது


இலங்கையில் கொரோனாவினால் அல்லது சந்தேகத்தின் பேரில் மரணித்து பலவந்தமாக எரிக்கப்பட்டிருப்பவர்களில் உங்களது உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்களின் விபரங்களை தமக்கு அறியத்தருமாறு இலண்டனை தளமாகக்கொண்டு இயங்குகின்ற People’s Rights Group (PRG) என்ற மனித உரிமை அமைப்பு அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

சேகரிக்கப்படுகின்ற தகவல்கள் ஆவணப்படுத்தல் மற்றும் சர்வதேச அறிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் என்றும் தகவல் தருபவர்களின் விபரங்களின் இரகசியத்தன்மை பேணப்படும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளை ஆவணப்படுத்துகின்ற இந்த முயற்சிக்கு உங்களது ஒத்துழைப்பை வழங்குங்கள்.

எரிக்கப்பட்டவர்களின் விபரங்களை கீழே உள்ள இனையத்தளத்தினூடாகவோ அல்லது வட்ஸப் இலக்கத்தினூடாகவோ தெரியப்படுத்துங்கள்.

Website:

https://ift.tt/3ang4X1

WhatsApp (Message only):

+447401018964

No comments:

Post a Comment