Tuesday, April 20, 2021

தாக்குதலிற்கு காரணமானவர்கள் எந்த பதவியிலிருந்தாலும், அரசாங்கம் அவர்களை தண்டிக்க தயங்காது - ஜோன்ஸ்டன்


நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்ட உயிர்த்தஞாயிறுதாக்குதல் குறித்த விபரங்களை அவர்கள் சிஐடியினரிடம் கையளிக்கவேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன் மூலம் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளிற்கு ஆதரவளிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடு;த்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஐக்கியமக்கள் சக்தியும் நாங்களும் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரியிறைப்பதில் அர்த்தமில்லை என தெரிவித்துள்ள ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தாக்குதலிற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிப்பதற்கான அரசாஙகத்தின் முயற்சிகளிற்கு உதவுவதே உங்கள் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்கள் எந்த பதவியிலிருந்தாலும் அவர்களுடைய அந்தஸ்த்து எவ்வாறானதாக காணப்பட்டாலும் அரசாங்கம் அவர்களை தண்டிக்க தயங்காது என அமைச்சர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment