Tuesday, April 20, 2021

உண்மையையும் பொய்யையும், புரிந்துக்கொள்ளுமாறு சந்திரிகாவிடம் தயாசிறி கோரிக்கை


உண்மையையும் பொய்யையும் புரிந்துக்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

கடிதம் ஒன்றின் ஊடாக அவரினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டம் ஒன்றை இரத்துச் செய்யுமாறு அறிவித்து அவரினால் வெளியிடப்பட்ட கடிதம் ஒன்று தொடர்பில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கட்சியின் கூட்டம் மற்றும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்படாமை, சூழ்ச்சியானதல்ல என்றும், மனச்சாட்சிக்கு அமைய உண்மையை புரிந்துக்கொள்ளுமாறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அந்தக் கடிதத்தில் கோரியுள்ளார்.

No comments:

Post a Comment