Friday, May 7, 2021

திடீர் சுகயீனமடைந்தவர் கொரோனாவினால் மரணம் - குறித்த பகுதியில் மக்கள் நடாமாட தடை


- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட குருமண்வெளி – 12 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பாலர் பாடசாலை வீதியில் வசித்து வந்த 61 வயதான கந்தப்பன் யோகராஜா திடீர் சுகயீனம் காரணமாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில் அனுமதிக்கப்பட்டபோது  மேற்கொள்ளப்பட்ட றபிட் அன்ரிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுத்திப்படுத்தப்படாததுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு   கொண்டு செல்லப்பட்டு வியாழக்கிழமை(06) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வெள்ளிக்கிழமை(07) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட குருமண்வெளி – 12 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பாலர் பாடசாலையில் வீதி, மற்றும் அதனை அண்டியுள்ள குறுக்கு வீதிகள், அனைத்தும் போக்குவரத்து அற்ற நிலையில் முற்றாக மூடப்பட்டுள்ளது.

அப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு சுகாதாரத் துறையினர் கட்டாய தனிமைப்படுத்தப்படும் இஸ்ரிக்கர்கள் வெள்ளிக்கிழமை ஒட்டினர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள மக்கள் வெளியே நடாமாட பொதுசுகாதரத் துறையினர் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில்

சுகாதார பரிசோதகர்கள், களுவாஞ்சிகுடி பொலிசார், மற்றும் இராணுவத்தினர்;; இணைந்து சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment