Sunday, January 26, 2014

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியிலிருந்து 83 மாணவிகள் பல்கலைக்கழகம் தெரிவு



(யு.எம்.இஸ்ஹாக்)



கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் 2013 இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் நல்ல திறமை சித்திகளை பெற்று 83 மாணவிகள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் எஸ்.எம். நவாஸ் தெரிவித்தார்.



இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,



விஞ்ஞானப் பிரிவில் 34 மாணவிகளும்,பொறியியல் பிரிவில் 14 மாணவிகளும், வர்த்தகப் பிரிவில் 3 மாணவிகளும், கலைப் பிரிவில் 32 மாணவிகளுமாக 83 மாணவிகள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டு கல்லூரிக்கும், அம்பாறை மாவட்டத்திற்கும் கல்முனை பிரதேசத்திற்கும் பெருமையை தேடிக்கொடுத்துள்ளனர்.



இதில் மருத்துவ பீடத்திற்கு 7 மாணவிகளும் பல் வைத்திய பிரிவுக்கு 1 மாணவியும், பிசி ஒத்தரபி பிரிவுக்கு 2 மாணவிகளும், உணவும் போசனை பிரிவுக்கு 2 மாணவிகளும், விவசாயப் பிரிவுக்கு 2 மாணவிகளும், விஞ்ஞான பட்டதாரிக்கு 10 மாணவிகளும், யுனானி மருத்துவ பிரிவுக்கு 4 மாணவிகளும், தாதியர் பிரிவுக்கு 5 மாணவிகளுமாக 34 மாணவிகள் விஞ்ஞானப் பிரிவிலும் பொறியியல் பீடத்திக்கு 3 மாணவிகளும், பொறியியல் பட்டதாரிக்கு 11 மாணவிகளுமாக 14 மாணவிகள் பொறியியல் பிரிவிலும், வர்த்தக முகாமைத்துவத்திற்கு 1, வர்த்தக பட்டதாரிக்கு 2 மாக 3 மாணவிகள் வர்த்தகப் பிரிவிலும், சட்ட பீடத்திற்கு 3 மாணவிகளும் கலை பட்டதாரிக்கு 29 மாணவிகளுமாக 32 மாணவிகள் கலைப் பிரிவில் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment