Saturday, April 19, 2014

சமாதான நீதவான்



மடவளையைப் பிறப்பிடமாகவும் மாத்தலை மண்தண்டாவலையை வசிப்பிடமாவும் கொண்ட யூ.யஹியான் அகில இலங்கை சமாதான நீதவான அண்மையில் மாத்தலை மாவட்ட நீதிபதி விராஜ் ரனதுங்க முன் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.



மடவளை பள்ளி வீதியைச் சேர்ந்த இவர் தற்போது மாத்தலை சாகிரா தேசிய பாடசாலையில் உதவி அதிபராகக் கடமையாற்றி வருகிறார். மகரகம் தேசிய கல்வி நிறுவகத்தால் நடத்ப்பட்டு வரும் திறந்த பாடசாலைகள் கல்வி நெறி, மாத்தளை ஹலீமிய்யா அரபுக்கலாசாலை, என்பவற்றில் கணித போதானாசிரியராகக் கடமையாற்றும் இவர் பயிற்றப்பட்ட கணித ஆசிரியரும் மடவளை மதீனா மத்திய கல்லூரியின் பழையமாணவருமாவார்.



இவர் பல்வேறு சமூக சேவை நிறுவனங்களில் பொறுப்புள்ள பல பதவிகளை வகித்தார். இவர் மாத்தலை மண்தண்டாவளை ஜூம்மா பள்ளியில் செயலாளர், மற்றும் மடவளை பஸார் வை.எம்.ஏ. இயக்கம், குண்ணேப்பான மடிகே கிராமோதய சபை என்பவற்றின் தலைவராகவும் கடமை யாற்றி உள்ளார். அத்துடன் மடவளை சுப்பானுல் முஸ்லீமீன் இயக்கத்தின் ஸ்தாபக உறுப்பினரும் தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் மடவளைக்கிளை இளைஞர் அமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார்.



மதீனா மத்திய கல்லூரியில் கிறிகட் குழு அமைப்பதில் முக்கிய பங்காற்றிய இவர் மதீனா கிறிகட் குழு பொறுப்பாசிரியராகவும், பேண்ட் வாத்திய இசைக் குழு பொறுப்பாசிரியராகவும் இருந்துள்ளார்.



மடவளையைச் சேர்ந்த ஹைரா நிறுவனக் குழுமத்தின் தவைலர் யூ.எம்.பாசில் அவர்களின் சகோதரரான இவர் காலம் சென்ற உவைஸ் - குர்ரத்துல் அய்ன் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராவார். 20.4.2014




No comments:

Post a Comment