Saturday, April 19, 2014

புத்தசாசனத்திற்குள்ளேயே அதனை அழிக்கும் நபர்கள் உருவாகியுள்ளனர் - பிரதமர் டி.எம். ஜயரத்ன



புத்தசாசனத்தை அழிக்க தயாராகியுள்ள, அதற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் நபர்களுக்கு நடவடிக்கை எடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என புத்தசாசன அமைச்சரான பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.



புத்தசாசனத்திற்குள்ளேயே அதனை அழிக்கும் நபர்கள் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,



இந்த நிலைமையானது பௌத்த மக்களுக்கும், பௌத்த பிக்குகளுக்கும் பிரச்சினையாக மாறியுள்ளது.



அப்படியான நபர்களை புத்தசாசனத்தில் இருந்து நீக்கும் வகையில் குறித்த சட்டத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.



இந்த சட்டத்திற்கு 31 தலைமை பௌத்த பிக்குகளில் உதவியும் கிடைத்துள்ளது என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment