இலங்கையின் சிங்கப்பூருக்கான உயர்ஸ்தானிகர் பேரியல் அஸ்ரப், ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலாரத்ன தேரரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
சீலாரட்ன தேரர் சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்துக்கு சென்றிருந்த போது அவரை சுமார் ஒன்றரை மணித்தியாலங்களாக அதிகாரிகள் காத்திருக்க செய்துள்ளனர்.
இதனையடுத்து அவர் தனிப்பட்ட ரீதியில் முறைப்பாடு ஒன்றை உயர்ஸ்தானிகரத்தில் கையளித்தார்.
இந்தநிலையிலேயே பேரியல் அஸ்ரப் தமது மன்னிப்பை கோரியுள்ளார்.
இனிவரும் காலத்தில் இவ்வாறான பிழைகள் ஏற்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment