Saturday, June 28, 2014

'இந்த அர­சாங்­கத்தின் சூழ்ச்­சி­யினால்தான் நாட்டில் இன முரண்­பா­டு­களும், குழப்­பங்­களும் ஏற்­ப­டு­கின்­றது''



சர்­வ­தேச அழுத்­தங்­களின் மத்­தியில் நாட்­டிற்குள் இனக்­க­ல­வ­ரத்தை ஏற்­ப­டுத்­து­வது சர்­வ­தேச விசா­ர­ணைக்கு வாய்ப்­பாக அமையும் என தெரி­விக்கும் ஜே.வி.பி. ஜன­நா­யகம் பற்றி பேச இந்த அர­சாங்­கத்­திற்கு தகு­தி­யில்லை எனவும் தெரி­வித்­தது. நாட்டை பாது­காக்­கவே சர்­வ­தேச விசா­ர­ணைக்கு எதிர்ப்பு தெரி­விக்­கின்­றோமே தவிர அர­சாங்­கத்தை காப்­பாற்­று­வ­தற்­கல்ல எனவும் ஜே.வி.பி. சுட்டிக் காட்­டி­யது.



இலங்­கைக்கு எதி­ரான சர்­வ­தேச விசா­ர­ணைக்­குழு நிபு­ணர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நிலைப்­பாட்­டினை வின­விய போதே அக்­கட்­சியின் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.



இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;



இலங்­கைக்கு எதி­ராக சர்­வ­தேச அமைப்­புக்கள் சதி­வ­லை­யினை போட்டு நாட்டை கட்­டுப்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர். சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று இலங்­கையில் இடம்­பெ­று­வதை நாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­வ­தில்லை என்­பதை ஆரம்­பத்தில் இருந்தே தெரி­வித்து வரு­கின்றோம். இதில் மாற்றம் எது­வு­மில்லை. எனினும் எமது முடிவு இந்த நாட்டை பாது­காக்­கவே தவிர இந்த அர­சாங்­கத்தை பாது­காப்­ப­தற்­காக அல்ல. சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று இங்கு இடம்­பெ­று­வ­தனால் இலங்­கையில் இடம்­பெறும் பிரச்­சி­னைகள் எவையும் தீரப்­போ­வ­தில்லை.



உண்­மை­யி­லேயே இந்த அர­சாங்­கத்தின் சூழ்ச்­சி­யினால் தான் நாட்டில் இன முரண்­பா­டு­களும் குழப்­பங்­களும் ஏற்­ப­டு­கின்­றது. இன­வாத அமைப்­பு­க­ளையும் இன­வா­தத்­தி­னையும் பரப்பி சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரான அடக்கு முறை­களை கையாள்­கின்­றனர். இதை நாம் போராடி கட்­டுப்­ப­டுத்த வேண்­டுமே தவிர சர்­வ­தேச அளவில் முறை­யி­டு­வதால் நடக்கப் போவது ஒன்­று­மில்லை.



சர்­வ­தேச அழுத்­தங்­களில் தற்­போது நாடு சிக்­குண்டு இருக்­கின்­றது. யுத்த குற்­றங்கள் மட்­டு­மன்றி அதன் பின்னர் இடம்­பெற்ற சில சம்­ப­வங்கள் தொடர்­பிலும் சர்­வ­தேச மட்­டத்தில் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் நடத்தக் கோரி­யுள்­ளனர். இது மட்­டு­மன்றி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஆசிய கட்­சிகள் பல அறிக்­கை­களை வெளி­யிட்டு இலங்­கையின் அடக்­கு­முறை சம்­ப­வங்­களை சர்­வ­தேச மட்­டத்தில் கொண்டு சென்­றுள்­ளனர். இவ்­வா­றா­ன­தொரு நிலையில் மேலும் சிறு­பான்மை மக்கள் தாக்­கப்­ப­டு­கின்­ற­மையும் நாட்டில் இனக்­க­ல­வரம் தோற்­று­விக்­கப்­ப­டு­கின்­ற­மையும் சர்­வ­தே­சத்தின் நோக்­கத்­திற்கும் அவர்கள் எதிர்­பார்க்கும் சர்­வ­தேச விசா­ர­ணைக்கும் வாய்ப்­பாக அமைந்து விடும்.



அர­சாங்கம் தொடர்ந்தும் தவ­றி­ழைத்துக் கொண்­டி­ருக்­கின்­றது. யுத்தம் முடி­வ­டைந்தும் அடக்கு முறை­களை கையாண்டு மோச­மா­ன­தொரு ஆட்­சி­யினை நடத்தி வரு­கின்­றது. சர்­வ­தேச மட்­டத்தில் ஜன­நா­யகம் அமைதி என எமது நாட்டின் தலைவர் பேசு­கின்றார். ஆனால் நாட்­டிற்கு உள் சர்­வா­தி­கா­ரமும் அடக்கு முறை­களும் கையா­ளப்­ப­டு­கின்­றது. உண்­மை­யி­லேயே ஜன­நா­யகம் பற்றி பேசும் உரிமை இந்த அர­சாங்­கத்­திற்கு இல்லை. மக்­களை பாது­காக்கத் தெரி­யாத மக்­களின் உரி­மை­களை மதிக்கத் தெரி­யாத ஒரு மோச­மான ஆட்­சி­யி­னையே இந்த அர­சாங்கம் நடத்தி வரு­கின்­றது. இதற்கு எதி­ராக மக்­களே போராடி உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள வேண்டும்.



நாட்டையும் மக்களையும் காப்பாற்ற மக்களே இன மொழி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும். இனவாதம் என்பதை அரசாங்கம் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றது என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். இன்று நிலவும் முரண்பாடுகள் மேலும் இந்த நாட்டில் கொண்டு செல்லப்படுமாயின் இன்னும் சிறிது காலத்தில் இந்த நாடே அழிந்து விடும் எனவும் தெரிவித்தார்.


No comments:

Post a Comment