Thursday, September 4, 2014

அல் ஹைதாவை எதிர்கொள்ள தயார் - இலங்கை அரசாங்கம் அறிவிப்பு



பயங்கரவாதத்தால் பல வருடங்கள் பாதிக்கப்பட்ட நாடு என்ற அடிப்படையில் அல் கைதாவினரை போன்ற ஜிகாடிட் வாதிகளின் அச்சுறுத்தலை இலங்கை அரசாங்கம் கவனமாக ஆராய்கிறது. அதேநேரம் அந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.



தீவிரவாதி அமைப்புக்கள் உலகம் முழுவதும் ஆபத்தை ஏற்படுத்தி வருகி;ன்றன.



இந்தநிலையில் அல் கைதா அமைப்பின் தலைவர், தமது அமைப்பு இந்திய உபகண்டத்தில் தமது கிளைகளை நிறுவவுள்ளதாக நேற்று வெளியிட்ட அறிவிப்பை இலங்கை அரசாங்கம் கவனமாக ஆராய்கிறது என்று அரசாங்கத்தின் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல 04-09-2014 செய்தியாளர்கள் மத்தியில் கூறியுள்ளார்.




No comments:

Post a Comment