Wednesday, April 15, 2020

ரியாஜ் பதியுதீன் தொடர்பில் இருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. 

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தகுதி தராதரம் பாராது தண்டனை பெற்றுக்கொடுக்க படும் என தெரிவித்தார். 

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment