அக்கட்சியின் உயர்பீடக் கூட்டம் நேற்று, வெள்ளிக்கிழமை, 25 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான இசாக் ரஹ்மான், அலி சப்ரி, முசாரப் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
தற்போதைய நிகழ்கால அரசியல் விவகாரங்கள், ஜனாஸா எரிப்பு, முஸ்லிம் சமூகத்தின் கொந்தளிப்பு, தமது கட்சியின் 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதவளித்தமை, உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டுள்ளன.
குறிப்பாக தமது கட்சியின் 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்குஆதரவளித்தமை தொடர்பில், உயர்பீட உறுப்பினர்கள் தமது வேதனையை வெளிப்படுத்தினர்.
இதன்போது கருத்துரைத்துள்ள கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன், தாம் எவ்வேளையிலும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுமாறு கட்சியின் 3 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எத்தகைய உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை எனவும், அவர்கள் தமது சுயவிருப்பில் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டு சமூகத்திற்கும், கட்சிக்கும் சங்கடத்தை ஏற்படுத்திவிட்டனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பில் முஸ்லிம் சமூகம் கவலையுற்றிருப்பதாகவும், எதிர்வரும் 2 வாரங்களுக்குள் இசாக் ரஹ்மான், அலி சப்ரி, முசாரப் ஆகிய 3 பாராளுமன்ற உறுப்பினர்களும் தாம், ஏன் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு வாக்களித்தோம் என்ற விபரத்தை எழுத்துமூலம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் எனவும் Jaffna Muslim இணையத்திற்கு தகவல் கிடைத்தது.

No comments:
Post a Comment