வரக்காபொலை மற்றும் கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 5 வயதுடைய சிறுவன் மற்றும் அவருடைய தாய் உட்பட ஐவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளாக வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.
தாம் அந்த பாணத்தை பருகியதாக தொற்றுக்குள்ளானவர்கள் சுகாதார அதிகாரிகளிடம் தகவல் வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த ஐவரும் தற்போது கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வரிசையில் பல மணித்தியாலங்கள் நின்றவர்களுக்கும், செல்பவர்களுக்கும் கொரோனா தொற்றுவதற்கான ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் அந்த பிரதேசங்களுக்கும் பாரிய ஆபத்துக்கள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சுகாதார சட்டங்களை மதிக்காமல் போலியான நபர்களின் பின்னால் சென்று உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment