Monday, April 18, 2022

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது சகலவகை எரிபொருட்களின் விலைகளையும் அதிகரித்தது


இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பு இன்று (18) நள்ளிரவு முதல் அமுல்ப்படுத்தப்படுவதாக சிபெட்கோ அறிவித்துள்ளது.

இதற்கமைய, சிபெட்கோவின் புதிய எரிபொருள் விலைகள் பின்வருமாறு....

92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் - 338 ரூபாய்,

95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர்- 389 ரூபாய்,

ஒடோ டீசல் ஒரு லீற்றர் - 289 ரூபாய்,

சூப்பர் டீசல் ஒரு லீற்றர் - 329 ரூபாய்.

No comments:

Post a Comment