Friday, August 18, 2023

உண்மையான அரசியல் யுத்தத்தை எதிர்பாருங்கள்


இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன் முறையாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் உண்மையான அரசியல் யுத்தம் நடக்கும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


நாட்டை அழித்த அரசியல் முகாமுக்கும் அதற்கு எதிராக நாட்டை கட்டியெழுப்பும் அரசியல் முகாமுக்கும் இடையில் இந்த அரசியல் யுத்தம் நடக்கும்.


அந்த போரின் வலிமை மற்றும் அளவை புரிந்துக்கொண்டு தேசிய மக்கள் சக்தி களத்தில் இறங்கியுள்ளது என்பதை ரணில் மற்றும் மகிந்த ஆகிய இரண்டு தரப்பினரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.


குழப்பமான அரசியல் தற்போது ஏற்படும். இன்னும் ஒரு வருடமே எஞ்சி இருக்கின்றது. அடுத்தாண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும். அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரங்கள் ஆரம்பமாகும்.

No comments:

Post a Comment