Monday, January 29, 2024

காசாவில் 122 ஊடகவியலாளர்கள் வீரமரணம் - தியாகங்களை அல்லாஹ் பொருந்திக் கொள்ளட்டும்


காசாவில் மேலும் 2 ஊடகவியலாளர்களை இஸ்ரேல் படுகொலை செய்துள்ளது.


காசாவின் அவலங்களை, காசா ஊடகவியலாளர்கள் உலகிற்கு உரத்துச் சொல்வதால்தான், பலம்பொருந்திய மேற்கு ஊடகங்களை பொய் பிரச்சாரங்களை முறியடித்து, காசா தகவல்களை முஸ்லிம் உம்மத் அறிந்து கொள்கிறது.


இலங்கையில் உள்ள சில முஸ்லிம் ஊடகவியலாளர்களும், முஸ்லிம் சார்பு ஊடங்களும் காசா பற்றிய விவகாரங்களை தமக்குள் ஹராம் ஆக்கிக்கொண்டுள்ள நிலையில், அந்த காசா ஊடகவியலாளர்களுக்காக நாம் பிரார்த்திப்போம்.


இஸ்ரேல் அக்டோபர் 7 ஆம் தேதியிலிருந்து இதுவரை, 122 காச ஊடகவியலாளர்களை படுகொலை செய்து, போர்க் குற்றம் புரிந்துள்ளது என்பதை ஞாபகத்தில் கொள்வோம்.


அந்த 122 ஊடகவியலாளர்களினதும் தியாகங்களை அல்லாஹ் பொருந்திக் கொள்ளட்டும்.

No comments:

Post a Comment