சிங்கள பக்கங்களில் 17 வயது சுக்ரா முனவ்வர் உடைய திறமைகள் , கருத்துக்கள் பாரட்டப்படுவதை காணும் போது ஏற்படும் மகிழ்ச்சி..
பைத்தியக்கார தீவிரவாதிகளின் தாக்குதல்களின் பிறகு உள்ளங்களில் ஏற்பட்ட குரோதங்களுக்கான ஒரு ஒளடதம் என்று கூற முடியும்.
முதலில் அவர் ஒதுக்கப்பட்ட , கவனங்களை ஈர்க்காத வறுமை மாணவர்களின் குரலாக இருக்கிறார்.
அத்துடன் சமையலுக்கு தான் பெண் என்ற ஆண்களின் மனநிலைக்கு எதிராக பேசுகிறார்.
திறமை மிக்க கிராமங்களில் இருக்கும் இளைஞர்கள் , யுவதிகளுக்காக பேசுகிறார்.
பெற்றோருக்கு கூட சுமையாக இருக்க கூடாது என்று ஆசைபடுகிறார்.
மனிதன் என்ற அடிப்படையில் சர்வதேச சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்.
தாய் மொழியை விட சிங்கள மொழியில் , சிங்கள இலக்கியத்தில் , வரலாற்று தகவல்களில் , பொது அறிவில் உள்ள தேர்ச்சி பெரும்பான்மை மக்களையே அதிசயம் அடையச் செய்துள்ளது.
அனைத்தையும் விட தனது வாழ்வின் இலக்கை கேட்ட போது குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தில் , குறிப்பிட்ட துறையில் கற்று குறிப்பிட்ட பெண் அதிகாரியாக வருவேன் என்று அவர் துள்ளியமாக வரையறை செய்துள்ள விடயம் குறிப்பாக மாணவர்களுக்கு நல்லதொரு முன்னுதாரணம்.
வாழ்த்துக்கள்..!
Safras Samsudeen
No comments:
Post a Comment