Tuesday, April 20, 2021

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஈராண்டுகள் பூர்த்தி - நாடளாவிய ரீதியில் நினைவேந்தல் நிகழ்வு


2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன்  ஈராண்டுகள் பூர்த்தியாகின்றன. இந்த தாக்குதலில் உயிரிழந்தோரை நினைவுகூரும் நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றன.

கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலய வளாகத்தில், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

அங்கு, வெளிநாட்டும“ தூதுவர்கள், சமய தலைவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment