Wednesday, March 5, 2014

அம்பாறை மாவட்ட பிரதேச செயலாளர்களுக்கு டெப் கையடக்கக் கணனிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு






(ஹாசிப் யாஸீன்)



அம்பாறை மாவட்ட பிரதேச செயலாளர்களுக்கு டெப் கையடக்கக் கணனிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.



அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டீ அல்விஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலக பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டனர்.



இதன்போது பிரதேச செயலாளர்கள் அனைவருக்கும் அரசாங்க அதிபரினால் டெப் கையடக்கக் கணனிகள் வழங்கி வைக்கப்பட்டன.



தயட்ட கிருள தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டதின் கீழ் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.


No comments:

Post a Comment