Tuesday, June 24, 2014

''இனங்­க­ளுக்­கி­டையே குரோதம் ஏற்­ப­டு­மானால், நாட்டில் அரா­ஜ­கமே உரு­வெ­டுக்கும்''



சுதந்­திரக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்தின் இறுதி தருணம் இது­வாகும். அமைச்­சர்கள் ஒரு­வரை ஒருவர் முட்டிமோதிக்கொள்ளும் அமைச்­ச­ரவை இலங்­கையில் மாத்­திரமே காணப்­ப­டு­கின்­றது என்று ஐ.தே.க. வின் காலி மாவட்டபாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஊடகப் பேச்­சா­ள­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார்.



தேவை­யற்ற முறையில் அதி­க­மான வைப­வங்கள் இடம்­பெறும் நக­ர­மாக அம்­பாந்­தோட்டை உலக சாதனை படைத்­துள்­ளது எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். ஐ.தே.க. வின் தலை­மை­ய­க­மான சிறி கொத்தாவில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.



இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், யுத்த வெற்­றிக்கு பின்பு மக்கள் சமா­தானம், ஐக்­கியம், அபி­வி­ருத்­தியை எதிர்­பார்த்­தனர். இருப்­பினும் இவற்றை நடை­மு­றைப்­ப­டுத்த இவ்­வ­ர­சினால் முடி­ய­வில்லை.



இனங்­க­ளுக்­கி­டையே குரோதம் ஏற்­ப­டு­மானால் நாட்டில் அரா­ஜ­கமே உரு­வெ­டுக்கும். எனினும் இன­வாத தூண்­டு­தல்­களை அரசு கண்­டு­கொள்­ளாமல் தட்­டிக்­க­ழிக்­கி­றது.



இதே­வேளை இவற்றை கருத்­திற்­கொள்­ளாத அரசு களி­யாட்ட நிகழ்­வு­க­ளையே மேற்கொண்டு வரு­கி­றது. தேவை­யற்ற முறையில் மக்­க­ளு­டைய பணத்தை விரயம் செய்து அம்­பாந்­தோட்­டை­யி­லேயே அதி­க­மான வைப­வங்­களை ஏற்­பாடு செய்து அர­சாங்கம் உலக சாதனை படைத்­துள்­ளது.



மாகம்­ புற துறை­மு­கத்­திற்கு கப்­பல்கள் வந்­தாலும், சென்­றாலும் வைப­வங்­களை நடத்துவதுடன் கப்­பல்­க­ளுக்கு பெற்றோல் நிரப்புவதனையும் வைப­வ­மாக அர­சாங்கம் கொண்­டா­டு­கின்­றது. இதற்­காக மக்­க­ளு­டைய பணத்தைக் கொண்டு பத்­தி­ரி­கை­களில் விளம்­ப­ரங்­களை பிர­சு­ரிக்­கின்­றது.



கல்வி, சுகா­தா­ரத்­து­றை­க­ளுக்கு உரிய நிதி ஒதுக்­கீடு செய்­யாமல் கார்ப்­பந்­தயம் திரைப்­பட விழாக்­க­ளுக்கு மக்­க­ளு­டைய பணத்தை அரசு வீண்­வி­ரயம் செய்து வரு­கின்­றது

இவ்­வ­ரசின் இறுதித் தருணம் இது­வாகும். மக்கள் அர­சாங்­கத்தின் மீது அதி­ருப்தி கொண்­டுள்­ளமை ஒரு­பு­ற­மி­ருக்க அரசின் அமைச்­சர்­களும் வெறுப்­ப­டைந்த நிலை­யி

லேயே உள்­ளனர். தற்­போது அமைச்­ச­ர­வையில் அமைச்­சர்கள் ஒரு­வ­ரை­யொ­ருவர் தாக்கிக்கொள்ளும் நிலை உரு­வெ­டுத்­துள்­ளது.



அமைச்­சர்கள் ஒரு­வ­ரை­யொ­ருவர் முட்டி மோதிக்­கொள்ளும் அமைச்­ச­ரவை இலங்­கையில் மாத்­தி­ரமே காணப்­ப­டு­கின்­றது என்றார்.


No comments:

Post a Comment