Tuesday, June 3, 2014

பாராளுமன்றத்தில் உரையாற்ற ரவூப் ஹக்கீமுக்கு அனுமதி மறுப்பு



(Tw)



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை கட்சித் தலைவராக கருத முடியாது என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.



நாடாளுமன்றில் ஹக்கீமை கட்சித் தலைவராக கருத முடியாது. ரவூப் ஹக்கீமை சபாநாயகர் கட்சித் தலைவராக அங்கீகரிக்கவில்லை.



கட்சித் தலைவர்கள் பட்டியலிலும் சபாநாயகர், ஹக்கீமின் பெயரை உள்ளடக்கவில்லை.



எனவே விசேட உரையாற்றுவதற்கு இடமளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.



கட்சித் தலைவர் என்ற ரீதியில் நாடாளுமன்றில் உரையாற்ற அனுமதியளிக்குமாறு ஹக்கீம், பிரதி சபாநாயகரிடம் இன்று கோரியிருந்தார்.



இந்தக் கோரிக்கையை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி நிராகரித்துள்ளார்.



நான்கு பெயர்கள் மட்டுமே கட்சி தலைவர்களாக உள்ளடக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.




No comments:

Post a Comment