Wednesday, February 19, 2020

சாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி இரத்து, அமைச்சரவை தீர்மானம்

சாய்ந்தமருது நகர சபையை உருவாக்குவதற்காக வௌியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதனை அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (20) தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் காணப்படும் இவ்வாறான விடயங்களை மீள ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்ததாகவும் அவர்  கூறியுள்ளார்.

சாயந்தமருது நகர சபையை இரத்து செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் தினங்களில் வௌியிடவுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment