Saturday, February 22, 2020

மோட்டார் வாகனங்களுக்கான சொகுசு வரி நீக்கம்

மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரியிலிருந்து பல வகை வாகனங்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளள்ளது.

அதற்கமைய கடந்த வருடம் மார்ச் மாதம் 6ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் திறந்த கடன் கடிதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 1800 சிலிண்டர் கொள்ளளவுக்கு மேல் இல்லாத பெட்ரோல் மோட்டார் வாகனங்களின் சொகுசு வரி நீக்கப்பட்டுள்ளது.

2300 சிலிண்டர் திறனைத் தாண்டாத அனைத்து டீசல் மோட்டார் வாகனத்திற்கும் அல்லது இயந்திர சக்தி 200 கிலோவோட்டை தாண்டாத அனைத்து மின்சார வாகனங்களுக்கும் இந்த சலுகை கிடைக்கிறது.

எனினும் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இந்த வாகனங்களை இலங்கை சுங்கத்திடம் இருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment