Sunday, April 5, 2020

பழைய செய்தியை, பகிர வேண்டாம்

கொரொனாவினால் மரணித்த ஜனாஸாக்களை அடக்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அவர்கள் போசிய பழைய ஓடியோ  ஒன்று தற்போது சமூக வளைத்தளங்களில் பகிரப்படுகின்றது.

இது சென்ற மாதம் 25ஆம் திகதி பலரின் முயற்சிகளுக்கு பின் மரணித்த ஜனாஸாக்களை அடக்க முடியும் என்ற அனுமதி கிடைக்கப் பெற்ற போது  பேசப்பட்ட ஒன்றாகும்.

எனவே தயவு செய்து இதனை பகிர்ந்து வீண் பிரச்சினைகளை ஏட்படுத்த  வேண்டாம் எனவும், பகிர்ந்தவர்கள் அவற்றை அழித்து அல்லது அதன் உண்மைத் தன்மை  தொடர்பான இப்பதிவை  பகிர்ந்து விடுமாறும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது.

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment