Monday, April 19, 2021

முஸ்லிம் அரசியல்வாதிகளை, சந்தேகிக்கும் மல்கம் ரஞ்சித்


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்கும் 20வது திருத்தத்திற்கு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களின், ஆதரவை பெற்றுக்கொண்டமைக்கும் இடையில் தொடர்பிருக்கலாம் என  கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் அரசியல் கட்சியின் தலைவர் ஒருவர் 20வது திருத்தத்திற்கு எதிராக வாக்களித்துள்ளமையும், அவரது கட்சி உறுப்பினர்கள் 20 வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளமையும், ரிசாத் பதியுதீனின் சகோதரர் விடுதலை செய்யப்பட்டமையும் கேள்விக்குறிய விடயங்களாக காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தும்இணக்கப்பாடொன்றின் ஒரு  பகுதியாகயிருக்கலாம் எனவும் அவர்தெரிவித்துள்ளார். TL

No comments:

Post a Comment