Friday, April 2, 2021

"அரசாங்கத்திற்குள் பிரச்சினையா என எம்மிடம் கேட்கின்றனர்"


அரசாங்கத்திற்கு 69 லட்சம் வாக்குகளை பெற்றுக்கொடுத்த மிகப் பெரிய அரசியல் அமைப்பை ஆரம்பித்த தலைவர்கள் என்ற வகையில் அந்த 69 லட்சம் மக்கள் ஆணையை பாதுகாத்துக்கொள்வதற்காக தான் அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு பாரிய போராட்டத்தை நடத்தி வருவதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அவிசாவளையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே கம்மன்பில இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்குள் பிரச்சினையா என சிலர் எம்மிடம் கேட்கின்றனர். கொழும்புக்கு சென்றால், சேர் என்ன அரசாங்கத்திற்குள் பிரச்சினையா என கேட்கின்றனர். அரசாங்கத்திற்குள் நாங்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்து வருவது உண்மை.

அரசாங்கத்தை ஒழிக்க நாங்கள் இந்த போராட்டத்தை நடத்தவில்லை. அரசாங்கத்தை பாதுகாக்க அதனை செய்கின்றோம். குறிப்பாக மக்கள் வழங்கிய ஆணையை பாதுகாக்க இதனை செய்கின்றோம். மக்களின் நம்பிக்கையை பாதுகாக்க இதனை செய்கின்றோம். 69 லட்சம் மக்களின் அபிலாஷைகளை பாதுகாக்க இதனை செய்கிறோம் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment