பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கைதுசெய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்துக்கு அழைப்பதைத் தடை செய்யுமாறு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று -'5- பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்படும் எந்தவொரு உறுப்பினரும் அது தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை, பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட கூடாதென்றும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment