Wednesday, February 2, 2022

சண்முகா வித்தியாலயத்தில் தாக்கப்பட்ட ஆசிரியை பஹ்மிதா தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை


ஏ.பி.எம்.அஸ்ஹர் 

திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் கடமையேற்கச் சென்ற போது தாக்கப்பட்ட ஆசிரியை பஹ்மிதா  தற்பொழுது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் அவரை நேரடியாக சந்தித்து உரையாடியதுடன்  இச்சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக  சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இதே வேளை இவர்  இது சம்பந்தமாக திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரையும் அவரது  அலுவலகத்தில் இன்று  சந்தித்துக்கலந்துரையாடினார். 

No comments:

Post a Comment