Saturday, April 9, 2022

நள்ளிரவு கடந்தும், #GotaGoHome எனும் தமது குறிக்கோளை வலியுறுத்தி, கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அரசாங்கத்துக்கு எதிராக நேற்று (09) கொழும்பு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டம், நள்ளிரவையும் கடந்து தொடர்ந்தும் பல்லாயிரக் கணக்கானோரின் பங்கேற்புடன் இடம்பெறுகின்றது. 

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் #GotaGoHome எனும் தமது குறிக்கோளை வலியுறுத்தி, ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment