Sunday, April 10, 2022

அரசுக்கெதிராக கிறிஸ்தவ மக்கள் எதிர்ப்பு போராட்டம் - வினை விதைத்தவன் வினையறுப்பான் என கோஷம் ( Video )


- பாறுக் ஷிஹான் -

கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தின் முன்னால் கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் பங்குபற்றிய  மின்சார தடை மற்றும் எரிடிபாருள் தட்டுப்பாடு, அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம் போன்றவற்றுக்கு எதிர்ப்புக்கும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (10) ஆராதனையின் பின்னர் இடம்பெற்றது. இப்போராட்டமானது  கல்முனை திரு இருதயநாதர் ஆலய பங்குத்தந்தை அருளானந்தன் தேவதாஸன்  தலைமையில் காலை    இடம்பெற்றதுடன்   சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள்  கலந்து கொண்டு   எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.

No comments:

Post a Comment