இந்நிலையில், ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஒரு சில விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்படாததை அடுத்தே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஆளுந்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பிரதமர் பதவியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என பொதுஜன முன்னணியின் ஒரு தரப்பு வலியுறுத்திய போதிலும் அதில் மாற்றங்களை ஏற்படுத்த ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்கவில்லையாம்.
இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிடம் ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கவலைகளை முன்வைத்த போதிலும், புதிய அமைச்சர்களை நியமிப்பது ஜனாதிபதியிடம் தான் உள்ளது என வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டாராம். இதனை அடுத்து ஆளுந்தரப்புக்குள் சில கருத்து முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. tm

No comments:
Post a Comment