Friday, December 9, 2022

மயான வீதியால் நடந்து செல்லும் போது, திடீரென கிழே வீழ்ந்து உயிரிழந்த பெண்


- வா.கிருஸ்ணா -


மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்பங்கேணி 40ஆம் கிராமத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.


பெரியகல்லாறு பிரதான வீதியை சேர்ந்த நாகமணி பூமலர் என்னும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச கிராம சேவையாளர் தெரிவித்தார்.


பெரியகல்லாறிலிருந்து 40ஆம் கிராமத்திற்கு பஸ்ஸில் நேற்று (08) மாலை வந்திறங்கி மயான வீதியால் நடந்து சென்றுகொண்டிருக்கும்போதே அவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


அப்பகுதியால் இன்று காலையே சென்றவர்கள் சடலத்தினை கண்டு பிரதேச கிராம சேவையாளருக்கு அறிவித்துள்ள நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.


கடுமையான குளிர் மற்றும் மழையுடனான காலநிலை நிலவிவரும் நிலையில் அதன்காரணமாக குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


அப்பகுதிக்கு சென்ற வெல்லாவெளி பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

No comments:

Post a Comment