Monday, January 27, 2014

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்தார் பாகிஸ்தான் தாய்





ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்தார் பாகிஸ்தான் தாய்

பாகிஸ்தானை சேர்ந்த தாய் ஒருவர் ஒரே தடவையில் ஆறு சிசுக்களை ஈன்றெடுத்துள்ளார்.



வழமையான பரிசோதனைக்காக கடந்த வெள்ளிக்கிழமை தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சென்ற சந்தர்ப்பத்தில் அவர் இந்த 6 சிசுக்களையும் பிரசவித்துள்ளார் இவர்களில் 4 பெண் சிசுக்களும் 2 ஆண் சிசுக்களும் அடங்குகின்றன.



குறித்த தாயும் 6 சிசுக்களும் ஆரோக்கியமாக இருந்த போதிலும் 2 பெண் சிசுக்கள் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


No comments:

Post a Comment