Tuesday, January 28, 2014

மதத்தின் பெயரால் பிரச்­சினை ஏற்­ப­டுத்த முயற்சி





(vi) மதங்­க­ளுக்கு இடையில் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தி மக்­களை குழப்­பு­வ­தற்கு இன்று சிறு பிரி­வினர் முயற்­சிக்­கின்­றனர். ஆனால் அது மதங்கள் மீதான பற்­றினால் செய்­யப்­ப­டு­வ­தில்லை. மாறாக தம்­மீது இருக்­கின்ற பற்றின் கார­ண­மா­கவே இவ்­வாறு செய்­கின்­றனர் என்று கத்­தோ­லிக்கத் திருச்­ச­பையின் முன்னாள் பேராயர் கலா­நிதி ஒஸ்வல்ட் கோமிஸ் ஆண்­டகை தெரி­வித்தார்.



எந்­த­வொரு மதமும் கொலை செய்­யு­மாறோ அல்­லது திருட்டு செயலில் ஈடு­ப­டு­மாறோ கூற­வில்லை. மதங்­க­ளுக்கு இடையில் காணப்­ப­டு­கின்ற வேற்­று­மை­க­ளிலும் பார்க்க ஒற்­று­மை­களே அதிகம் உள்­ளன. மதங்­களை பாது­காப்­ப­தற்­காக ஏனைய மதங்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றை­களை மேற்­கொள்­ளக்­கூ­டாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.



கொழும்பில் நேற்று நடை­பெற்ற மத நல்­லி­ணக்கம் தொடர்­பான கருத்­த­ரங்கில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.தெற்­கா­சி­யா­கொள்கை மற்றும் ஆய்வு நிறு­வ­னத்தின் ஏற்­பாட்டில் நடை­பெற்ற இந்த செய­ல­மர்வில் நாட்டில் மத நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பான பரிந்­துரை தொகுதி ஒன்றும் வெளி­யி­டப்­பட்­டது.



நான்கு மதங்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் மதத் தலை­வர்கள் இந்த நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றினர். ஒஸ்வல் கோமிஸ் ஆண்­டகை தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,



மதத்தின் பெயரால் பிரச்­சினை ஏற்­ப­டுத்த முயற்சி



மதத்தின் பெயரால் நாட்டில் இல்­லாத பிரச்­சினை ஒன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு சில தரப்­பினர் முயற்­சிப்­ப­தாக தெரி­கின்­றது. நாட்டில் எந்­த­வொரு மதமும் கொலை செய்­யு­மாறோ அல்­லது திருட்டு செயலில் ஈடு­ப­டு­மாறோ கூற­வில்லை. அவற்றை அனைத்து மதங்­களும் எதிர்க்­கின்­றன. தவ­றுகள் செய்­வதை எந்த மதமும் அனு­ம­திக்­க­வில்லை.



வேற்­று­மை­யை­விட ஒற்­று­மையே அதிகம்



அந்­த­வ­கையில் மதங்­க­ளுக்கு இடையில் காணப்­ப­டு­கின்ற வேற்­று­மை­க­ளிலும் பார்க்க ஒற்­று­மை­களே அதிகம் உள்­ளன. வர­லாற்றில் எமது நாட்டில் அனைத்து மதங்­களும் மிகவும் ஒற்­று­மை­யாக இருந்­துள்­ளன. அனு­ரா­த­புரம் யுகத்தில் இலங்­கையில் ய­க்ஷ­தர்கள் இருந்­துள்­ளனர். அவர்கள் அர­ச­வை­யிலும் இருந்­துள்­ளனர். அத்­துடன் 1915 இலங்­கையில் இடம்­பெற்ற துர­திஷ்­ட­வ­ச­மான சம்­ப­வத்­தின்­போது மக்கள் ஒற்­று­மை­யுடன் செயற்­பட்­டனர். கத்­தோ­லிக்க திருச்­சபை அன்று முன்­வந்து வழங்­கிய ஆரோக்­கி­ய­மான பங்­க­ளிப்பு மிகவும் முக்­கி­ய­மா­னது.



மக்­களை குழப்ப முயற்சி



ஆனால் அவ்­வா­றான வர­லாறு தெரி­யா­த­வர்கள் இன்று மதங்­க­ளுக்கு இடையில் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தி மக்­களை குழப்­பு­வ­தற்கு இன்று சிறு பிரி­வினர் முயற்­சிக்­கின்­றனர். ஆனால் அது மதங்கள் மீதான பற்­றினால் செய்­யப்­ப­டு­வ­தில்லை. மாறாக தம்­மீது இருக்­கின்ற பற்றின் கார­ண­மா­கவே இவ்­வாறு செய்­கின்­றனர். தமது மதங்­களை பாது­காப்­ப­தற்­காக ஏனைய மதங்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றை­களை மேற்­கொள்­ளக்­கூ­டாது.

கடந்த 30 வரு­ட­கா­ல­மாக பாரிய பிரச்­சினை கார­ண­மாக பல்­வேறு பாதிப்­புக்­களை எதிர்­கொண்டோம். இலங்­கையில் மட்­டு­மல்ல ஆசி­யாவின் வேறு நாடு­க­ளிலும் இவ்­வா­றான பிரச்­சி­னைகள் இருந்­துள்­ளன. இது அர­சியல் பிரச்­சினை அல்ல. எமது நாட்டின் எதிர்­காலம் தொடர்­பான விவ­காரம். ஆரோக்­கி­ய­மான எதிர்­கா­லத்தை அடைந்­து­கொள்ள எமது பங்­க­ளிப்பை வழங்­க­வேண்டும். எனவே இங்கு மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற முயற்­சிக்கு அனை­வரும் ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும் என்றார்.



கொட்­டு­கொட தம்­மா­வாச தேரர்



கொட்­டு­கொட தம்­மா­வாச தேரர் உரை­யாற்­று­கையில்,



நாட்டில் சிங்­கள தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்­று­மை­யாக வாழ்ந்த வர­லாறு உள்­ளது. ஆனால் தற்­போது மத ரீதியில் சில சிக்­கல்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு சிலர் முயற்­சிப்­பது தொடர்பில் நாம் மிகவும் அவ­தா­ன­மாக இருக்­க­வேண்டும். பிரச்­சி­னை­களை தோற்­று­விக்கும் பிரி­வினர் உலகில் எப்­போதும் இருந்­துள்­ளனர். தற்­போதும் அவ்­வா­றான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. நாம் இந்த விட­யத்தில் மிகவும் கவ­ன­மாக இருக்­க­வேண்டும். குழப்­பத்தை ஏற்­ப­டுத்த உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு சக்­திகள் முயற்­சிக்­கின்­றன.



அர­சியல் சக்­திகள் இவ்­வாறு பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்த முயற்­சிப்­பார்கள். இவற்றை புரிந்­து­கொண்டு நாம் செயற்­ப­ட­வேண்டும். மதத் தலை­வர்கள் இணைந்து பிரச்­சி­னை­களை தீர்க்­க­வேண்டும் என்றார்.



குகா­னந்த ஷர்மா



கருத்­த­ரங்கில் குகா­னந்த ஷர்மா குருக்கள் உரை­யாற்­று­கையில்,



சுனாமி அனர்த்தம் ஏற்­பட்­ட­போது அப்­போ­தைய ஜனா­தி­பதி சந்­தி­ரிகா நாட்டில் இருக்­க­வில்லை. ஆனால் சம்­பவம் கேள்­வி­பட்­ட­வுடன் அவர் நாடு திரும்­பினார். அனர்த்­தங்­களை பார்த்­து­விட்டு ஐந்து நாள் கழித்து சந்­தி­ரிகா குமா­ர­துங்க மத வைபவம் ஒன்றை நடத்­தினார். அது­போன்று இன்றும் அவர் ஒரு கூட்­டத்தை தற்­போது நடத்­து­கின்றார். தற்­போ­தைய நிலை­மையில் நாட்டில் சில மத ஸ்தலங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளன. அவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் குறிப்­பிட்ட பிர­தேச மக்கள் ஒன்­றி­ணைந்து செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்றார்.



மாஹிர் மெள­லவி



நிகழ்வில் உரை­யாற்­றிய இஸ்லாம் மதத் தின் மாஹிர் மெள­லவி குறிப்­பி­டு­கையில்

காலத்­துக்கு ஏற்ற ஒரு முக்­கிய விட­யத்தை தெற்­கா­சிய கொள்கை மற்றும் ஆய்வு நிறு­வனம் மேற்­கொண்­டுள்­ளது. நாட்டில் அபிவிருத்தி இடம்பெறுகின்றமை எங்களுக்குத் தெரிகின்றது. ஆனால் எமது மனது மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே இந்த அபிவிருத்தியின் பயனை எம்மால் அனுபவிக்க முடியும் என்றார்.


No comments:

Post a Comment