Monday, April 21, 2014

ரவூப் ஹக்கீமை சந்தித்த அந்த அமைச்சர் யார்? விசாரிக்க பௌத்த பிக்குகள் ஜனாதிபதிக்கு கோரிக்கை






மலேசியாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை சந்தித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பௌத்த பிக்குமார் சிலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இந்த விடயம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு நாயக்க தேரர் உட்பட சில பௌத்த பிக்குகள் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரவுள்ளனர்.



சம்பந்தப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர் கடந்த காலங்களில் புனித பூமி பிரதேசங்களில் உள்ள காணிகளை அந்நிய மதத்தினர் பயன்படுத்துவதற்கு ஆதரவாக செயற்பட்டுள்ளார்.



அந்த அமைச்சர் அந்நிய மத அடிப்படைவாதிகளிடம் பணத்தை பெற்று வருகின்றாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் பிக்குகள் குறிப்பிட்டுள்ளனர்.



இது தொடர்பில் ஜனாதிபதி அனுப்பி வைக்கப்படும் கடிதம் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் அடுத்த இரண்டு வாரங்களில் அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிக்கு ஒருவர் கூறியுள்ளார்.




1 comment:

  1. நீங்கள் காவியுடை அனிந்த காபீர்கள் என்பதற்காக இந்த நாட்டின் ஜனாதிபதியோ அமைச்சரோ அல்லது முஸ்லீம்கலோ மூத்திரம் பேய்வதையும் உங்கலுக்கு சொல்லனுமோ கேட்க பார்க்க ஆலில்லாவிட்டால் ஓ................பாக்குரின்க போல் இருக்கு

    ReplyDelete