Thursday, May 29, 2014

பொது­ப­ல­சே­னா­வின் கூட்­டத்தை பார்த்துக் கொண்­டி­ருந்த முஸ்லிம் சிறுவன் மீது தாக்குதல்



பொது­ப­ல­சே­னா­ ஒழுங்கு செய்த கூட்­டத்தை பார்த்துக் கொண்­டி­ருந்த சுமார் 14 வயது மதிக்­கத்­தக்க முஸ்லிம் சிறுவன் ஒரு­வனை பொது­ப­ல­சே­னாவின் ஆத­ர­வா­ளர்கள் கடு­மை­யாகத் தாக்­கி­ய­துடன் சிறு­வனை பதுளை பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­தனர்.



நேற்று புதன்­கி­ழமை பிற்­பகல் 3.00 மணி­ய­ளவில் பதுளை பஸ் தரிப்பு நிலை­யத்தில் இடம் பெற்ற கூட்­டத்தின் போது மேற்­படி சிறுவன் பொது­ப­ல­சே­னா­வி­னரால் தாக்­கப்­பட்­டுள்ளான்.



பொது­ப­ல­சே­னாவின் கூட்­ட­மொன்று பேர­ணியும் நேற்று பது­ளையில் இடம் பெற்­றது. பதுளை முதி­யங்­கனை விகா­ரைக்கு அருகில் இருந்து ஆரம்­ப­மான பேரணி பஸ் தரிப்பு நிலை­யத்தை வந்­த­த­டைந்­தது. அங்கு கூடிய பொது­ப­ல­சே­னா­வினர் கூட்­ட­மொன்­றையும் நடத்­தினர். இக் கூட்­டத்தில் மேற்படி முஸ்லிம் சிறுவன் நின்­றி­ருந்த போது அவனை இனங்­கண்ட பொது­ப­ல­சேனா ஆத­ர­வா­ளர்கள் நீ முஸ்லிம் தானே உன்னை யார் இங்கு வரச் சொன்­னது என ஆக்­ரோ­ஷ­மாக கேள்­வி­களை தொடுத்­த­துடன் சிறுவன் மீது சர­மா­ரி­யாக தாக்­குதல் நடத்­தி னர்.



அத்­துடன் அருகில் நின்­றி­ருந்த பொலி­ஸா­ரிடம் சிறு­வனை ஒப்படைத்தனர். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவன் பின்னர் உறவினர்களிடம் ஒப்படை க்கப்பட்டதாக தெரிவி க்கப்படுகிறது.


No comments:

Post a Comment