Wednesday, June 25, 2014

தர்கா நகரில் கைப்பற்றப்பட்ட 18 பெற்றோல் குண்டுகள் தொடர்பில் விசாரிக்க போகிறார்களாம்..!



அளுத்கம தர்கா நகரில் வைத்து பெற்றல் குண்டுகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் விசேட காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.



காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண இவ்வாறு குறிப்பிட்டார்.



இந்த பெற்றல் குண்டுகளை தயாரித்தது யார் என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.



காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து தர்கா நகரில் வைத்து 18 பெற்றல் குண்டுகள் நேற்று மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment