Sunday, June 29, 2014

முஸ்லிம்கள் இராணுவத்தின் மீது நம்பிக்கையை இழக்கக்கூடும் - கோத்தபாய



மங்கள சமரவீர வாயைப் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.



அரசியல் தேவைகளுக்காக நாட்டின் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் பற்றிய தகவல்களை மங்கள சமரவீர வெளிப்படுத்தி வருகின்றார்.



வாய்க்கு பிரேக் இன்றி இவ்வாறான கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தால், மக்கள் மங்களவிற்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.



மங்கள சமரவீர இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.



இதனால் முஸ்லிம் மக்கள் இராணுவத்தின் மீது நம்பிக்கையை இழக்கக் கூடும்



இவ்வாறு போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



அரச இரகசிய சட்டங்களின் அடிப்படையில் மங்களவின் கருத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment