Monday, April 19, 2021

புத்தாண்டில் பணிகளை ஆரம்பித்த ஜனாதிபதி - அமைச்சர்கள், Mp க்கள், பணிக்குழாமினருடன் சந்திப்பு


பிறந்திருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டில் கடமைப் பணிகளை ஆரம்பித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தனது பணிக்குழாமினரை சந்தித்தார்.

சவால்களை வெற்றிகொண்டு மக்கள் எதிர்பார்ப்புக்களை அடைந்துகொள்வதற்காக நேர்மறையான மனப்பாங்குடன் திட உறுதி மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பிறந்திருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு அமைச்சர்கள் மற்றும் பணிக்குழாமினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அங்கு வருகை தந்திருந்தவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2021.04.19


No comments:

Post a Comment