இலங்கைக்கு உள்ளேயும் வெளியிலும் சிறிதளவில் பௌத்த மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், இலங்கை அரசாங்கம் மத தீவிரவாதிகளை உருவாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மத தீவிரவாதம், நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்கு உலகளவில் ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டிலுள்ள ஆட்சியை கலைத்து, இது போன்ற பிரச்சினைகளை எளிதில் தீர்வு காண முடியும் எனவும், நல்லிணக்கத்தின் அடிப்படையில் இந்த பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் மக்கள் பலர் ஒன்று சேர்ந்து வாழ விரும்பினாலும், பலர் தீவிரவாதத்தை வளர்ப்பதாக ரணில் குற்றம் சாட்டியுள்ளார்.
மத பிரச்சினைகளை உருவாக்குவதால் ராஜபக்ச அரசை நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment